search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் போட்டி"

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது. சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியே நடத்தப்பட்டது.

    இதில், அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ}மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றிப் பெறும் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக போட்டியை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் தேகளீசன் தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் போட்டியை நடத்தினர்.

    • போட்டியில் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று சைக்கிள் போட்டிகள் நடை பெற்றது. 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

    இதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியினை ராஜா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிச ளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும். 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10-வது பரிசு வரை ரூ.250 வீதம் காசோலையாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இன்று தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த சைக்கிள் போட்டி நடை பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 24கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான போட்டியும் நடைபெற்றது. கோவளம், வடநெம்மேலி, பூஞ்சேரி என மூன்று திருப்பங்களுடன் 3 அணிகள், என வெளிநாட்டு, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 179 பேர் உட்பட மொத்தம் 1,125 பேர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 கட்டமாக இந்த போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டியின் போது பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, அப்பகுதியில் இரு வழித்தடங்களிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அனை த்தும் கிழக்கு கடற்கரை சாலை வெங்கம்பாக்கத்தில் திருப்பி செங்கல்பட்டு வழியாக காலை 9 மணிவரை சென்றது.

    இதேபோல் கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் பூஞ்சேரியில் மாற்றுப்பாதையில் திரும்பி ஓ.எம்.ஆர் வழியாக சென்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வாகனங்கள் அக்கரை சோழிங்கநல்லூர் வழியாக ஓ.எம்.ஆர் சாலையில் சென்றது. இதனால் கிழக்குகடற்கரை சாலை சுமார் 5மணி நேரம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீரர்கள் சென்ற சைக்கிள்களின் பின்னால் சைக்கிள் மெக்கானிக், மருத்துவ பிரிவினர் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர். நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சைக்கிள் போட்டியை கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    அண்ணா பிறந்த நாளையொட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி இன்று நடந்தது. புத்தேரியில் இருந்து அப்டா மார்க்கெட் வரும் அணுகு சாலையில் இந்த போட்டி நடைபெற்றது. 13 வயதிற்குள்ளான மாண வர்களுக்கு 15 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டரும், 15 வயதிற்குள்ளான மாணவர்க ளுக்கு 20 கி.மீட்டரும், மாணவி களுக்கு 15 கி.மீட்டரும், 17 வயதிற்குள்ளான மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 20 கி.மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ரெனோ முதல் பரிசையும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெய்வன் அன்டேல் இரண்டாம் பரிசையும், கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரால்டு சேம் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

    13 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவி அன்லின் லிரின்டே முதல் பரிசையும், முக்குலம்பாடு புனித போலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷிகா இரண்டாம் பரிசையும், நாகர்கோவில் பிஷப் ரெமிஜூஸ் பள்ளி மாணவி தேஜா மீனாட்சி மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில்ராம் முதல் பரிசையும், காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ஜெயந்த் குமார் இரண்டாம் பரிசையும், ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுவின் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் வெட்டூர்ணி மடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான சுருதி முதல் பரிசையும், ஆர்த்தி இரண்டாம் பரிசையும், அஸ்மிதா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

    17 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஸ்ரீமஞ்சு நாதன் முதல் பரிசையும், ஸ்ரீமஞ்சு தேவன் இரண்டாம் பரிசையும், கென்னி தாமஸ் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான ஆஸ்மி முதல் பரிசும், ஆன்சி இரண்டாம் பரிசையும், வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி ஜெனிட்டா மூன்றாம் பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஓய்வு) விஜயகுமாரி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளை காலை 7 மணிக்கு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை சைக்கிள் போட்டி நடத்தப்பட உள்ளது.

    போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

    3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

    இப்போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 5ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் , 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள்அவரவர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • வேலூரில் நாளை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளையொட்டி 2023-24-ம் ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் வேலூரில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் நடத்தப் படும் இந்த போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் 13 வயது, 15 வயது, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும்.

    இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையா சிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்றும் அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தும் கலந்து கொள் ளலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படமாட்டாது.

    போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர்களை நாளை காலை 6 மணிக்குள் வேலூர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை, சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகள் காட்பாடி அருகிலுள்ள பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேட்டில் நிறைவடையும்.

    மேலும் விவரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி கள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப் பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வருகிற 14-ந்தேதி காலை 8 மணிக்கு புத்தேரி-அப்டா மார்க்கெட் அணுகு சாலை யில் நடைபெற உள்ளது.

    13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    போட்டியில் வெற்றி| பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 என்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு விளை யாட்டு அலுவலகம் பொறுப் பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.

    சொந்த சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்க னைகளுக்கு பரிசு தொகை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப் படும். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களுடைய வங்கி புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்ப முள்ள மாணவ-மாணவி கள் விதி களை பின்பற்றி புத்தேரி அப்டா அணுகு சாலையில் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மாவட்ட சைக்கிள் போட்டி நடத்தப்படும்.
    • பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

    ராமநாதபுரம்

    அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் ேபாட்டிகள் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. 13, 15,17, வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு தனி தனியே போட்டிகள் நடத்தப்படும்.

    ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 4 முதல் 10-வது இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல், வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகலுடன் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மேலூர் அருகே மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
    • ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    மேலூர்

    77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட சைக்கிளிங் கழகம் சார்பாக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டி மேலூர் நாவினிபட்டியில் நடைபெற்றது. மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் வல்லத்தரசன் முன்னிலை வகித்தார். மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் கெங்காதரன், மதுரை மாவட்ட சேர்மன் சின்னன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரொபோனி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை வென்றோருக்கு சான்றி தழ்களும், பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டது. போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டியில் முதல் 2 இடங்களை வென்றவர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள். சைக்கிள் பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    • அருண்குமார் என்ற மாணவர் 19 வயது பிரிவு போட்டியில் முதல் இடத்தை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் பாலமுருகன், நிர்வாக இயக்குனர் நிர்மலா பாலமுருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லான்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் அருண்குமார் என்ற மாணவர் 19 வயது பிரிவு போட்டியில் முதல் இடத்தை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் சஞ்சய் காந்த் என்ற மாணவன் 17 வயதிற்கான சைக்கிள் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இதை அடுத்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் பாலமுருகன், நிர்வாக இயக்குனர் நிர்மலா பாலமுருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×